சிம்மசொப்பனமாக மாறியுள்ள ஹோர்முஸ் நீரிணை ; நிபுணர்கள் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தைச் சீர்செய்ய அமெரிக்கா எடுத்து வரும் தீவிர முயற்சிகளுக்கு மத்தியிலும், அங்குள்ள நிலைமை "உண்மையில்" முன்பிருந்ததைப் போலவே நீடிப்பதாக கடல்சார் பாதுகாப்பு நிபுணர் கோர்மாக் மெக்காரி தெரிவித்துள்ளார்.
கடந்த 48 மணிநேரம் மிகவும் பரபரப்பாக இருந்தபோதிலும், பல கப்பல்கள் இன்னும் அந்தப் பகுதியில் சிக்கியுள்ளன.

135 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றன
பிபிசியின் 'ரேடியோ 4' நிகழ்ச்சியில் பேசிய 'கண்ட்ரோல் ரிஸ்க்ஸ்' ஆலோசனை நிறுவனத்தின் கடல்சார் பாதுகாப்பு இயக்குநர் கோர்மாக் மெக்காரி, தற்போதைய கள நிலவரம் பெரிய மாற்றமின்றி அப்படியே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அந்த வழியாகச் செல்லும் கப்பல் கூட்டணிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமானால், கடற்படை மற்றும் வான்வழிப் படைகள் ஒருங்கிணைந்து மிகவும் அதிநவீன பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ச்சியான அடிப்படையில் முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் போர்ச் சூழலுக்கு முன்பதாக, ஒரு சாதாரண நாளில் சுமார் 135 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றன. ஆனால், தற்போது இரண்டு வணிகக் கப்பல்களை மட்டும் அமெரிக்கா வழிநடத்திச் சென்றதாகக் கூறுவது (இதை ஈரான் மறுத்துள்ளது), இயல்பான போக்குவரத்தில் மிகச்சிறிய அளவே ஆகும்.
ஹோர்முஸ் நீரிணைப் பகுதி அமெரிக்காவிற்கு ஒரு தந்திரோபாய ரீதியிலான "சிம்மசொப்பனமாக" மாறியுள்ளது என்பதே கசப்பான உண்மை என மெக்காரி சுட்டிக்காட்டியுள்ளார்.