ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை!
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட டெல்டா வைரஸ் பாதிப்பு, ஐரோப்பிய நாடுகளில் வரும் 1-ஆம் திகதிக்குள் ஐந்து மடங்காக உயரும் என்று ஐரோப்பிய யூனியன் நோய் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆமபமான கொரோனா வைரஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து , கடந்த 2020-ஆம் ஆண்டின் இறுதியில், இந்த கொரோனா பரவல் குறைய துவங்கிய இந்த கொரோனா, பிரித்தானியா, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.
இதனால் பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை ஏற்பட்டது. இந்தநிலையில் இந்தியாவில் உருமாறிய கொரோனாவுக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டெல்டா வைரஸ் இதுவரை 111-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. டெல்டா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளான பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் டெல்டாவின் பாதிப்பு மீண்டும் தீவிரமாகியுள்ளது. இந்நிலையில் டெல்டா வைரஸ் காரணமாக ஐரோப்பியாவில் வரும் ஆகஸ்ட் 1-ஆம் திகதிக்குள் கொரோனா பாதிப்பு 5 மடங்கு உயரும் என்றும் ஐரோப்பிய யூனியன் நோய் தடுப்பு ஏஜென்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாறுபாடு காரணமாக பல நாடுகளில் தற்போது கொரோனா தொற்று நோய் நிலைமை தொடர்ந்து மோசமடைந்து கொண்டே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சைப்ரஸ், கிரீஸ், லிதுவேனியா, லக்சம் பர்க், மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா, ஸ்பெயின் உள்பட 20 நாடுகளில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
வரும் ஆகஸ்ட் 1-ஆம் திகதிக்குள், வார இறுதியில் 1 லட்சம் பேரில் 420 பேர் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறோம். அதன் பிறகு 1 லட்சம் மக்களில் 620 பேர் பாதிக்கப்படக் கூடும். கடந்த வாரம் 10 லட்சம் பேரில் 6.8 பேர் உயிரிழந்த விகிதம், வரும் வாரங்களில் 10 லட்சம் மக்களில் 10 பேர் உயிரிழக்கும் நிலைமை ஏற்படலாம் என்றும் எதிர் பார்க்கப்படுகிறதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ஜூலை 5 முதல் 11-ஆம் திகதி வரை ஒரு வார காலத்தில் ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பு 60 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.