5 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற திடீர் சந்திப்பு
2017ஆம் ஆண்டுக்குப் பிறகு உலக வர்த்தக நிறுவனம் இன்று முதன்முறையாகச் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள உலக வர்த்தக அமைப்பின் தலைமையகத்தில் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முதல் வரும் 15 ஆம் திகதி வரை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சந்திப்பில் உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.
நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Ngozi Okonko-Iweala இதை வழிநடத்தவிருக்கிறார். COVID-19 நோய்ப்பரவல், மீனவர்களுக்கான மானியங்கள், மின்-வர்த்தகம், வேளாண்மை, உணவு நிவாரணம் ஆகிய அம்சங்கள் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் உலக வர்த்தக நிறுவனம், உறுப்பு நாடுகளின் சம்மதத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதால், பல விவகாரங்களில் இணக்கம் காண்பது கடினமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.