அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்த கைக்குழந்தை வழக்கு: சமீபத்திய தகவல்
Family of toddler who died in fall from Toronto apartment sues building owners: ரொரன்றோ அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறு குழந்தையின் குடும்பத்தினர், கட்டிட உரிமையாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
கனடாவின் ரொரன்றோ நகரிலுள்ள வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ளது 50 Graydon Hall Drive என்னும் அடுக்குமாடிக் குடியிருப்பு.
அந்த குடியிருப்பின் 19ஆவது மாடியில், ரக்ஷித் சௌஹான், தீபாலி காஷ்யப் தம்பதியர் தங்கள் கைக்குழந்தையுடன் வாழ்ந்துவந்த நிலையில், மே மாதம் ஒரு நாள் தங்கள் குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
இரண்டு வயதை எட்டாத அந்தக் குழந்தை, விளையாடும்போது ஜன்னல் கண்ணாடியைத் தொட்டதாகவும், திடீரென அந்தக் கண்ணாடி உடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் ரக்ஷித், தீபாலி தம்பதியர்.
ஒரு நொடிப்பொழுதில், கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாக குழந்தை வெளியே விழுந்திருக்கிறாள்.
குழந்தை தங்கள் கண் முன்னே விழுந்து உயிரிழந்ததைக் கண்டு திகிலடைந்த பெற்றோர், சொல்லொணா அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.
இந்நிலையில், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள் அந்தக் குழந்தையின் பெற்றோரும் தாத்தா பாட்டியும்.
அந்தக் கட்டிடத்தில் ஏற்கனவே இதுபோல கண்ணாடி உடைந்ததால் அங்கு குடியிருக்கும் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது தெரிந்த நிலையிலும், அதை சீர் செய்ய கட்டிட உரிமையாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார்கள் அவர்கள்.
அத்துடன், குழந்தை இறந்ததும், அந்தக் கட்டிட உரிமையாளர்கள் குடும்பம் எதையோ மறைக்க முயல்வதாக அவதூறு பரப்பியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
ஆகவே, அந்தக் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் கட்டிட நிர்வாகம் தங்களுக்கு 18 மில்லியன் டொலர்கள் இழப்பீடு வழங்கவேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்துள்ளது அந்தக் குழந்தையின் குடும்பம்.
இதற்கிடையில், அதே வடக்கு யார்க் பகுதியில் அமைந்துள்ள மற்றொரு அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையன்று, ஒரு ஆறு வயது சிறுமி விழுந்து உயிரிழந்துள்ளாள் என்னும் துயரச் செய்தி ஒன்றும் வெளியாகியுள்ளது.