பனி மலைகளினால் சூழந்த இந்த நாட்டில் ஏ.சீக்கான கேள்வி அதிகரிப்பு
ஆல்ப்ஸ் பனிமலைகளினால் சூழப்பெற்ற சுவிட்சர்லர்நதில் காற்று சீராக்கிகளுக்கு (air-condition) கடுமையான கேள்வி ஏற்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வீடுகளில் காற்ற சீராக்கிகள் பொருத்தப்படுவது என்பது மிக அரிதாகவே நடைபெறும் விடயமாகும்.
அந்த நாட்டில் கூடுதலான குளிரான காலநிலை காரணமாக வீடுகளை சூடாக வைத்திருப்பதற்கான கட்டமைப்புக்களே எல்லா வீடுகளிலும் காணப்படுகின்றன.
இவ்வாறான ஓர் நிலையில் தற்பொழுது காற்று சீராக்கிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.
அண்மைய வாரங்களில் சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகின்ற நிலையினால் இவ்வாறான மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடுமையான வெப்பநிலை நிலவும் காரணத்தினால் காற்றச் சீராக்கிகளின் மூலம் வீடுகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள மக்கள் அதிக நாட்டம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் கான்டன்களில் காற்றுச் சீராக்கிகளை வீடுகளில் பொருத்துவதற்கும் பல்வேறு அனுமதிகள் பெற வேண்டியதுடன் சில காட்டுப்பாடுகளும் உண்டு.
இதனால் அநேகமான மக்கள் நடமாடும் காற்றுச் சீராக்கிகளை ( mobile air conditioners) கொள்வனவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காலநிலை மாற்றத்தை கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் கோடை காலம் பற்றிய திட்டங்கள் வகுக்கப்பட வேண்டுமென அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.