மின்னல் தாக்கியும் உயிர்பிழைத்த அதிசய மனிதர்!
இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்த போது கையில் குடையுடன் பயணித்த நபரை மின்னல் தாக்கியது. எனினும் அவர் உயிர் பிழைத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.
35 வயதான அந்த நபர் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்பு பணியாளராக பணியாற்றி வருகிறார். ஜகார்த்தாவில் மழை பெய்து கொண்டிருந்த போது வெட்டவெளியான இடத்தில் கையில் குடையுடன் அவர் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவரை மின்னல் தாக்கியதில் தீப்பொறிகள் வெளிவந்தன. எனினும் அதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. மின்னல் தாக்கி மயங்கி விழுந்த அவரை அவருடன் பணி புரிபவர்கள் விரைந்து சென்று முதலுதவி அளித்தனர்.
Security officer in Jakarta was struck by lightning while on duty, avoid using radio and cellular telephones when it is raining, the condition of the victim survived after 4 days of treatment. not everyone has the same chance to live. 当選確率 #Bitcoin #NFTs $BTC $ETH #ALERT pic.twitter.com/4XhW6Oh3U9
— Lexus RZ (@Heritzal) December 26, 2021
எனினும், அவருடைய கைகள் தீயில் கருகியிருந்தன. அதன்பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்போது அவர் நலமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் கையில் இருந்த வாக்கி-டாக்கி மின்னலை ஈர்த்ததாக கூறப்படுகிறது.
எனினும் கையில் குடையை பிடித்துக் கொண்டு வெட்டவெளியில் மழையில் சென்றதால் தான் இந்த அசம்பாவிதம் அரங்கேறியுள்ளதாக சிலர் தெரிவித்தனர்.