புகைப்படம் வெளியிட்டு இளைஞரை தேடும் பொலிஸ்
கிழக்கு யார்க் அடுக்குமாடி குடியிருப்பின் லிஃப்ட் பகுதியில் பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானது தொடர்பாக 24 வயது இளைஞரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணியளவில் குறித்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. சம்பவத்தின் போது 40 வயதான அந்த பெண்ணும் குறித்த இளைஞரும் லிப்டில் ஏறியதாக பொலிசார் கூறுகின்றனர்.
லிஃப்ட் கதவுகள் மூடப்பட்ட பின்னர் அந்த நபர் வலுக்கட்டாயமாக அந்த பெண்ணை சீரழித்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அந்த குடியிருப்பு வளாகத்தில் இருந்து அந்த இளைஞர் மாயமானதாக கூறப்படுகிறது.
இந்த விவகராம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை முன்னெடுத்த பொலிசார், தாக்குதலில் ஈடுபட்ட நபர் ரொறன்ரோவில் வசிக்கும் 24 வயதான David Simonic என அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போது அவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.