கனடாவில் அதிசொகுசு வாகனங்களை திருடியவர்கள் அதிரடி கைது!
கனடாவில் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் சுமார் 1.5 மில்லியன் டாலர் பெறுமதியான ஆடம்பர வாகனங்களை கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களிடமிருந்து வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பீல் பிராந்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த சந்தேக நபர்கள் வாகனங்களை கடத்துவதுடன் இரவு நேரங்களில் வீடுகளை உடைத்து பொருள் கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் ஆடம்பரமான 13 வாகனங்களை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் தொடர்பாக சில காலங்களாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்கள் கடத்திய பல வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 22 வயதான கோடி வொட்ஸ், 28 வயதான பிராண்டன் ஹுன்டன் மற்றும் 24 வயதான சவான்னா ச்சேவாஸ் சந்தேக நபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியான விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 2 ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்களுடன் இந்த சந்தேக நபர்கள் வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புபட்டிருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.