வெளிநாட்டு மாணவர்களுக்கு கனடா பிரதமரிடமிருந்து ஒரு முக்கிய செய்தி
வெளிநாட்டு மாணவர்கள் ஒன்ராறியோ மாகாணத்துக்குள் நுழைவதை கனடா அரசு தடை செய்ய உள்ளது.
கனடாவுக்கு கல்வி கற்பதற்காக வரும் வெளிநாட்டு மாணவர்களில் 46 சதவிகித மாணவர்கள் ஒன்றாறியோவுக்குதான் வருகின்றனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஒன்ராறியோவுக்கு சர்வதேச மாணவர்கள் வருவதை தடை செய்ய அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஒன்ராறியோ மாகாண ஆளுநர் Doug Ford கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், மாகாணத்துக்குள் அத்தியாவசிய காரணங்கள் தவிர்த்து வேறு காரணங்களுக்காக மக்கள் நுழைவதையும் அரசு தடுக்கவேண்டும் என Ford கேட்டுக்கொண்டுள்ளாராம்.
இதுவரை கனடாவில் 1.22 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், ஒன்ராறியோ மாகாணத்தில் மட்டும் 463,000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள்.
அத்துடன் கனடாவின் மொத்த இறப்பு எண்ணிக்கை 24,219இல் 8,050 பேர் ஒன்ராறியோவில் மட்டுமே உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.