கனடாவில் மர்மமான முறையில் மாயமான தாயாரும் மகளும்
கனடாவில் மாயமான தாயார் மற்றும் மகள் தொடர்பில் விசாரணையின் ஒருபகுதியாக பொதுமக்களின் உதவியை டர்ஹாம் பிராந்திய காவல்துறை நாடியுள்ளது.
வியாழக்கிழமை Sceptor Place பகுதிக்கு தாயார் மற்றும் மகள் தொடர்பில் நலம் அறியும் நோக்கில் பொலிசார் சென்றுள்ளனர். ஆனால், குறித்த குடியிருப்பில் பொலிசார் தேடிச் சென்ற இருவரும் இல்லை எனவும், ஆனால் சந்தேகம் ஏற்படுத்தக்கூடிய வகையில் ஆதாரங்கள் சிக்கியதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த குடியிருப்பை வேறு யாரும் நுழையாதபடி பொலிசார் நடவடிக்கை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய உத்தரவின்றி, குடியிருப்புக்குள் நுழைந்து சோதனை முன்னெடுக்க முடியாது என்பதால், காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மாயமான இரு பெண்களில் ஒருவர் 58 வயதான Ava Burton எனவும், இன்னொருவர் 85 வயதான Tatilda Noble என்பதும் தெரிய வந்துள்ளது.
தற்போது வரையில் கிடைத்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்களின் நலன் விசாரிக்க அழைக்கப்பட்ட வேளையில், அந்த குடியிருப்பில் எவரும் காணப்படவில்லை எனவும்,
ஆனால் குடும்ப உறுப்பினர்கள் சிலர் அந்த குடியிருப்பில் தங்கியிருந்துள்ளது கண்டறியப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.