சந்தேகத்திற்கிடமாக பறந்த சீன ரோன்! சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை
இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் டிரோன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக பறந்த நிலையில் பாதுகாப்பு படையினர் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அத்துமீறி பறந்த டிரோனை பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. இது குறித்து இந்திய பாதுகாப்பு படை வட்டாரங்கள் தரப்பில்,
வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில் ஃபெரோசேபூர் செக்டாரின் அருகே வன் என்ற எல்லை நிலை உள்ளது. சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தப்பகுதியில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் கருப்பு நிறத்தில் டிரோன் ஒன்று பறந்தது.
இதைக் கவனித்த பாதுகாப்பு படை வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தினர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் உளவு பார்க்கும் நோக்கத்தில் டிரோன் பறக்க விடப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை முன்னெடுக்கபப்ட்டு வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.