பிரான்சுக்கு 41 அகதிகளை அனுப்பி வைத்த சுவிஸ் அதிகாரிகள்
பிரான்ஸ் நாட்டுக்கு சுவிஸ் அதிகாரிகள் பயணசீட்டை கொடுத்து ஆப்கானிஸ்தானை சேர்ந்த 41 அகதிகளை அனுப்பி வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பிரான்சுக்குள் நுழைவதற்குரிய அனுமதி பத்திரம் எதுவும் இருக்கவில்லை. மாறாக அவர்களிடம் பயணச்சிட்டை மாத்திரம் இருந்துள்ளது.
விசாரணைகளில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அதிகாரிகளே தமக்கு
பயணசீட்டை ஏற்பாடு செய்து தந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும் விசாரணையில் ஒஸ்ரியாவில் இருந்து சூரிச் நகரம் வாயிலாக பாரிசுக்கு சுவிஸ் அதிகாரிகள் பயணசீட்டைக் கொடுத்து அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.