20 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து பலியான ஸ்விட்சா்லாந்து பெண் உயரதிகாரி
ஈரானுக்கான ஸ்விட்சா்லாந்து தூதரக பெண் உயரதிகாரி ஒருவா், 20 மாடி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸாா் விசாரணை தொடங்கியுள்ளனா்.
50 வயதாகும் குறித்த பெண் அதிகாரி, டெஹ்ரானிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தாா். இந்த நிலையில், அவரைக் காணவில்லை என தூதரகப் பணியாளா் ஒருவா் பொலிஸாருக்குத் தகவல் அளித்தாா்.
அதையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த அதிகாரி கட்டடத்திலிருந்து விழுந்து உயிரிழந்தமை தெரியவந்தது.
இதேவேளை 1979-ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கத் தூதரகம் செயல்படவில்லை. அங்குள்ள ஸ்விட்சா்லாந்து தூதகரம் மூலம்தான் ராஜீய ரீதியிலான பணிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.