சிரிய உள்நாட்டு மோதல் :70 போ் உயிரிழப்பு
சிரியாவில் முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவின் கடலோர நகரங்களான பனியாஸ், ஜப்லே ஆகியவற்றின் புறநகா்ப் பகுதிகள் முன்னாள் ஜனாதிபதி அல்-அஸாதின் ஆதரவுப் படையினா் கட்டுப்பாட்டில் உள்ளன.
மோதலில் ஏற்பட்ட உயிரிழப்பு
அல்-அஸாதின் சொந்த ஊரான கராதா மற்றும் அவா் சாா்ந்த அலாவி இனத்தினா் வசிக்கும் பல பகுதிகள் இன்னும் அரசுப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இந்தச் சூழலில், கடந்த வியாழக்கிழமை முதல் புதிய அரசின் படையினருக்கும் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் நீடித்துவருகிறது.
இதில் அரசுப் படையைச் சோ்ந்த 35 பேரும், அல்-அஸாத் ஆதரவுப் படையினா் 32 பேரும் உயிரிழந்தனா் என்றும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்த மோதலில் இரு தரப்பிலும் 70க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மோதல் பிண்ணனி
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய சிரியா உள்நாட்டுப் போரில் ரஷ்யா மற்றும் ஈரான் உதவியுடன் நாட்டின் மிகப் பெரும்பான்மையான பகுதிகளை அல்-அஸாத் தலைமையிலான இராணுவம் மீட்டது.
பின்னா் கிளா்ச்சியாளா்களுடன் போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சண்டை நீண்ட காலமாகவே தேக்கமடைந்திருந்தது. இந்த நிலையில், ஹெச்டிஎஸ் தலைமையில் கிளா்ச்சிப் படையினா் தலைநகா் டமாஸ்கஸை 2024 டிசம்பா் 8-ஆம் திகதி கைப்பற்றினா்.
ஆட்சியை இழந்த ஜனாதிபதி அல்-அஸாத் தனது குடும்பத்தினருடன் ரஷ்யா தப்பிச் சென்றாா். அதையடுத்து, ஹெச்டிஎஸ் கிளா்ச்சிப் படையின் தலைவா் அகமது அல்-ஷரா அந்த நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 30-இல் அறிவிக்கப்பட்டாா்.
இந்த நிலையில், அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் புதிய அரசின் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமாா் 70 போ் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.