சீனா மீது தைவான் குற்றச்சாட்டு
கடந்த 1949-ம் ஆண்டு சீனாவில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தைவான் தனி நாடாக மாறியது.ஆனால், தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீன அரசு கூறுகிறது.
தேவைப்பட்டால் தைவானைக் கைப்பற்றுவோம் என்று சீனா மிரட்டி வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே ராணுவ பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், சீன அரசு மீது தைவான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதில், தைவான் பாதுகாப்பு அமைச்சகம், சீன ராணுவ நடவடிக்கைகள் குறித்து, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விரிவான அறிக்கையை வெளியிடுகிறது.
தைவான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தனது சொந்தப் பிரதேசம் என்று சீனா உரிமை கொண்டாடும் தைவான் தன்னாட்சி குடியரசின் மக்களுக்கு அழுத்தம் கொடுக்க சீனா பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த யுக்திகளின் மூலம் தைவான் ராணுவத்தையும், தைவான் மக்களையும் சீர்குலைக்க சீனா முயற்சிக்கிறது."