தாலிபான்களின் அதிரடி அறிவிப்பு... இனி இவை யாவும் செல்லாது
ஆப்கானில் தாலிபான் வெளியிட்ட அறிவிப்பால் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர் அந்நாட்டு இளைஞர்கள்.
தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஆப்கானை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அதிலிருந்து அவர்கள் ஆப்கானில் பல கடஉமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
அதில் ஆணைகள் சிறிய தாடி வைத்தல்,பெண்கள் பள்ளிக்கு செல்ல மறுப்பு போன்றவைகளையும் கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது 2000ம் ஆண்டு முதல் கடந்த 2020ம் ஆண்டு வரை அந்நாட்டில் பட்டம் பெற்ற நபர்களது பட்டங்கள் எதுவும் செல்லாது என தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அந்நாட்டின் தற்போதைய கல்வி அமைச்சர் அப்துல் பாகி ஹக்கானி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தற்போது உள்ள முதுகலை பட்டங்கள் யாவும் மதரசாவில் கற்கும் மத அடிப்படையிலான கல்வியினை விட குறைவாகும்.
இதன் காரணமாகவே கடந்த 20 வருடங்களில் பெற்ற சகலதுறை பட்டங்கள் எவையும் செல்லுபடியாகாது என கூறினார்.