கனடாவில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தமிழர் சிக்கினார்!
கனடாவில் கொலை குற்றச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த நபரை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர். 34 வயதான சதீஸ்குமார் ராஜரத்தினம் எனும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 20ம் திகதி இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டில் சதீஸ்குமார் ராஜரத்தினம் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபருக்கு கனடா முழுவதும் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன், அவர் ஆபத்தானவர் என்றும் அறிவிக்கப்பட்ட்டிருந்தார்.
இந்நிலையில், வியாழனன்று, ராஜரத்தினம் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.