பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் ஒருவர் நியமனம்!
பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி (Vikram Doraiswami )என்னும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடின உழைப்பாளி என அழைக்கப்படும் விக்ரம் துரைசாமி (Vikram Doraiswami ), இதற்கு முன் பங்களாதேஷுக்கான இந்திய தூதராக பொறுப்பு வகித்துவந்தார்.
அதேவேளை 1992இல் அரசு பணியில் இணைந்த விக்ரம் துரைசாமி , சரளமாக சீன மொழி பேசக்கூடியவர் ஆவார்.
தென் கொரியாவுக்கான தூதராக இருந்தபோது, KIA motors நிறுவனத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவதில் அவர் (Vikram Doraiswami )முக்கிய பங்காற்றினார்.
அதுமட்டுமல்லாது உஸ்பெகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்காக இந்திய தூதராகப் பணியாற்றிய விக்ரம் துரைசாமி (Vikram Doraiswami ), பிரதமரின் தனிச்செயலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.