திரும்பி பார்க்க வைத்த தொழில்நுட்பம்..... இது எப்படி சாத்தியம்?
உடலில் எந்த உறுப்பையும் அசைக்கக் கூட முடியாத ஒருவர் Hello, World' என ட்வீட் செய்துள்ளமை உலகை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஒருவர் தனது உடல், கை என எதையும் அசைக்காமல், அவர்களின் எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்ற முடியுமா? என்றால் முடியாது என்று தான் பலரும் கூறுவார்கள். ஆனால், அப்படி ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் தற்போது நிகழ்ந்துள்ள நிலையில் பலரையும் இந்த செய்தி ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் பிலிப் ஓ கீஃப். கடந்த 2015 ஆம் ஆண்டு, விபத்து ஒன்றில் சிக்கிய பிலிப்பிற்கு, உடலில் சில நரம்பு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக Amyotrophic Lateral Sclerosis (ALS) என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதாவது, பிலிப்பால் தனது உடலின் எந்த உறுப்பையும் அசைக்க முடியாது. அதோடு அவரால், பேச நினைத்தால் கூட தன் வாயை அசைக்க முடியாது.
பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்ஸ் கூட, இதே ALS வகை என்னும் குறைபாடு மூலம் தான் பாதிக்கப்பட்டிருந்தார். இதேவேளை முன்னதாக, சமூக வலைத்தளத்தில் பிலிப் அதிக ஆக்டிவாக இருந்து வந்துள்ளார் .
இதனிடையே, கடந்த 6 ஆண்டுகளுக்கு மேல், மனதில் நினைத்ததை யாரிடமும் சொல்லக் கூட முடியாமல், சற்று மன உளைச்சலிலும் இருந்துள்ளார். இந்நிலையில் தான், 'Hello, World' என்ற ட்வீட்டை பிலிப் செய்துள்ளார்.
உடலில் எந்த உறுப்பையும் அசைக்கக் கூட முடியாத ஒருவர், எப்படி ட்வீட் செய்திருப்பார் என அனைவருக்கும் தோன்றலாம். மொபைல் போன், கணினி என எதையும் எடுக்காமல், வாய் திறந்து எதுவும் பேசாமல், பிலிப் தன் மூளையில் நினைத்த ஒன்றே ட்வீட்டாக மாறியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதாவது பிலிப்பின் மூளையில், பேப்பர் கிளிப் அளவில், சிறிய மைக்ரோ சிப் ஒன்று, சில தினங்களுக்கு முன் பொருத்தப்பட்டது. இதன் மூலம், அவர் நினைக்கும் எண்ணங்களை எடுத்துக் கொள்ளும் சிப், அதனை எழுத்து வடிவமாக மாற்றுகிறது.
அப்படி மாற்றிய எழுத்து வடிவம் தான், "hello, world! Short tweet. Monumental progress" என ட்வீட்டாக மாறியுள்ளது. கலிபோர்னியா பகுதியில் அமைந்துள்ள 'Synchron' என்னும் நிறுவனம், பிலிப்பிற்கான மைக்ரோ சிப்பை உருவாக்கியுள்ளது.
மேலும், இந்த உலகிலேயே, ஒருவரின் எண்ணத்தின் உதவியோடு, செய்யப்பட்ட முதல் சமூக வலைத்தள பதிவாக பிலிப்பின் ட்வீட் அமைந்துள்ளது. இந்நிலையில் உலகளவில் இந்த ட்வீட் அதிக அளவில் வைரலாகி வருகிறது.
அதே வேளையில், உடலை அசைக்க முடியாத ஒருவரின் எண்ணங்களை, தொழில் நுட்பம் மூலம் பிரதிபலிக்கச் செய்துள்ளதால், இது உலகில் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.