சட்டத்தை தளர்த்திய மாகாண நிர்வாகம்... கனேடிய சிறுவனின் முகத்தை பதம் பார்த்த புல்டாக்
ஒன்ராறியோவில் விலங்கு சேவைகள் அமைப்பால் விடுவிக்கப்பட்ட நாய் ஒன்று 13 வயது சிறுவனின் முகத்தை பதம் பார்த்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
டேக்வாண்டோ பயிற்சி மாணவரான 13 வயது முஹம்மது அல்முதாஸ் என்ற சிறுவனையே அமெரிக்க புல்டாக் வகை நாய் ஒன்று மூர்க்கத்தனமாக தாக்கியுள்ளது.
ஏற்கனவே நாய்கள் மீதான பயம் காரணமாக, சிறுவன் அல்முதாஸ் அதனுடன் நெருங்கிப் பழகுவதில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், டேக்வாண்டோ கலையில் அடுத்த நிலை செல்ல வேண்டும் எனில், அச்சம் களைய வேண்டும் என பயிற்சியாளர் Tommy Chang அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் நவம்பர் 5ம் திகதி, சிறுவன் அல்முதாஸ் பயிற்சி முடித்து குடியிருப்புக்கு திரும்ப உடைமாற்றி தயாராகும் போது, பயிற்சி கூடத்திற்கு வெளியே காத்திருந்த சிறுவனின் தந்தைக்கு தமது மகன் அலறும் சத்தம் கேட்டுள்ளது.
உள்ளே விரைந்து சென்று பார்த்த அவர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் ஒருகணம் தவித்துப் போயுள்ளார். சிறுவன் அல்முதாஸ் முகம் முழுவதும் ரத்தக்காயங்களுடன் காணப்பட்டுள்ளான்.
பயிற்சியாளர் Tommy Chang ஆசையாக வளர்க்கும் அமெரிக்க புல்டாக் வகை நாயே சிறுவனை கடித்துக் குதறியுள்ளது. சமீபத்தில் ஒன்ராறியோ மாகாணத்தில் அமெரிக்க புல்டாக் வகை நாய்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டதுடன், அந்த வகை நாய்களை உரிய அதிகாரிகள் வீடு தோறும் சென்று மீட்கவும் செய்துள்ளனர்.
மட்டுமின்றி இந்த வகை நாய் இனங்கள் கனடாவில் தடை செய்யப்பட்டவையாகும் தற்போது சட்டத்தில் தளர்வுகள் ஏற்படுத்தி, குறித்த நாய் வகைகளை காப்பகத்தில் இருந்து மாகாண நிர்வாகம் விடுவித்த நிலையில், சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான்.
இந்த விவகாரம் தற்போது பொதுமக்களால் விவாதிக்கப்பட்டு வருவதுடன், பலரும் நாய்களிடம் இருந்து நாம் தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுரை கூறியுள்ளனர்.
ஆனால், புல்டாக் வகை நாய்களை தாம் தடை செய்ய வேண்டும் என கூறவில்லை எனவும், வரைமுறை தேவை என மட்டுமே வலியுறுத்துவதாக பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.