லண்டனில் கொரோனாவுக்கு பலியான சிறுவன்: கண்ணீரில் குடும்பம்
ஒன்றாரியோவின் லண்டன் நகரில் கொரோனாவுக்கு பலியான சிறுவன் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
லண்டனில் செவ்வாய்க்கிழமை கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்த சிறுவனை குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.
குறித்த தகவலை லண்டன் சுகாதாரத்துறை நிர்வாகம் வியாழக்கிழமை உறுதி செய்துள்ளது. Owen Brandies என்ற சிறுவன் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதே நாளில் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
மேலும், உடற்கூராய்வில் அவருக்கு வேறு நோய் எதுவும் இருந்ததில்லை எனவும், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
குறித்த தகவலை Brandies-ன் சகோதரி Brandice Arquette உறுதி செய்துள்ளார். மேலும், மிடில்செக்ஸ்-லண்டன் பிராந்தியத்தில் இன்றுவரை ஏற்பட்ட கொரோனா இறப்புகளில் பிராண்டிஸ் மிக இளையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் 19 வயதான Yassin Dabeh என்ற இளைஞரே, கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி இறந்த இளவயதினர் என கூறப்பட்டது.
இதனிடையே, பிராண்டிஸ் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மிடில்செக்ஸ்-லண்டன் பிராந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.