ரொறன்ரோவில் பட்டாகத்தியுடன் சிறுவனை சூழ்த்து தாக்கிய கும்பல்
ரொறன்ரோ நகரில் 15 வயது சிறுவனை பட்டாகத்தியுடன் நள்ளிரவில் கும்பல் ஒன்று சூழ்ந்து தாக்கியதுடன் கொள்ளையிட்டும் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை சுமார் 12.13 மணியளவில் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
பே மற்றும் டன்டாஸ் தெருவில் பல்வேறு கத்திக்குத்து காயங்களுடன், ஆனால் உயிருக்கு ஆபத்தின்றி குறித்த சிறுவன் மீட்கப்பட்டதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்போது குறித்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் உள்ளார். முதற்கட்ட விசாரணையில், 10 பேர் கொண்ட கும்பலே சிறுவனை சூழ்ந்து தாக்கியுள்ளது.
ஒருவர் பட்டாகத்தியுடன் காணப்பட்டதாகவும், அவரே இந்த தாக்குதலுக்கு முதன்மை காரணமாக இருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனை தாக்கி கொள்ளையிட்ட பின்னர் அந்த கும்பல் டன்டாஸ் தெருவில் கிழக்கு நோக்கிச் சென்றதாக தெரிய வந்துள்ளது.
இருப்பினும் சிறுவன் தாக்கப்பட்ட சரியான இடத்தை இன்னும் தேடுவதாக ரொறன்ரோ பொலிசார் கூறுகின்றனர்.