தாய்வான் எல்லையில் பதற்றம் ; சுற்றிதிரிந்த சீனாவின் போர் விமானங்கள்
தாய்வான் எல்லையில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் பறந்ததையடுத்து தாய்வானில் போர்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக தாய்வானை சீனாவுடன் இணைப்பதற்காக சீனா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
சீனாவின் 74 போர் விமானங்கள்
இதுவேளை தாய்வானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக் கொள்ளக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளதோடு மேலும் தாய்வான் எல்லைக்குள் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தைத் தூண்டுகின்றது.
அதன்படி கடந்த ஒரு நாளில் சீனாவுக்குச் சொந்தமான 74 போர் விமானங்கள் தாய்வான் எல்லையில் கண்டறியப்பட்டன.
அவற்றில் 60 விமானங்கள் எல்லையைக் கடந்து தங்களது வான்பகுதியில் பறந்து சென்றதாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சரகம் கூறியது.
இதனால் தாய்வான் எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.