கொந்தளிக்கும் இலங்கை; முன்னாள் எம்பியையும் விட்டுவைக்காத மக்கள்!
மட்டக்களப்பு அக்கரைப்பற்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனாவின் வீட்டிற்கு முன்னால் ரயர் எரிக்கப்பட்டதால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
அக்கரைப்பற்றில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேனா வின் வீட்டுக்கு முன்னால் ரயர் தீயிட்டு எரிப்பு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது .
காலிமுக திடலில் கோட்டா கோ ஹோம் கம மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து மகிந்த ராஜபஷ மற்றும் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்களை தீக்கிரையாக்கப்ட்டுவருகின்றது.
இந் நிலையில் அக்கரைப்பற்று சாகாம வீதியிலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பொதுஜன பெரமுனை கட்சியின் அமைப்பாளருமான பொடியப்பு பியசேனவின் வீட்டிற்கு முன்னாள் சம்பவதினமான ஒன்று திரண்ட இளைஞர்கள் வீதியில் ரயர்களை போட்டு தீயிட்டதையடுத்து அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.
இதனையத்து பொலிசார் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

