மாலி நாட்டின் சோதனை சாவடி மீது பயங்கரவாத கும்பல் திடீர் தாக்குதல்! 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
மாலி நாட்டின் ராணுவ சோதனை சாவடி ஒன்றின் மீது பயங்கரவாத கும்பல் ஒன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதலில் அந்நாட்டு ஆயுத படையை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். 14 பேர் காயமடைந்து உள்ளனர் என அரசு படைகள் உறுதிப்படுத்தி உள்ளன.
தென்மேற்கே கவுலிகொரோ பகுதியில் ராணுவ சோதனை சாவடி ஒன்று அமைந்துள்ளது. இதில், வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் காயமடைந்த 3 ராணுவ வீரர்களை ஹெலிகாப்டர் உதவியுடன் சம்பவ பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாதிகளில் 6 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.