நாட்டையே உலுக்கிய சிறார்களின் படுகொலை: ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
தாய்லாந்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 சிறார்கள் உட்பட சுமார் 36 பேர் கொல்லப்பட்ட நிலையில் நாடு முழுவதும் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டார்.
இதில், 22 குழந்தைகள் உட்பட 36 பேர் பலியாகினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட பன்யா கம்ராப் தனது மனைவி மற்றும் மகனையும் துப்பாக்கியால் சுட்டு, தாமும் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், பிஞ்சுக் குழந்தைகள் 22 பேர் கொல்லப்பட்டதற்கு தாய்லாந்து முழுவதும் வெள்ளிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் தாய்லாந்து துணை பிரதமர் தெரிவிக்கையில், இந்த துக்க சம்பவம் தாய்லாந்து மக்கள் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களை மன அழுத்ததிற்கும், சோகத்திற்கும் தள்ளியுள்ளது என்றார்.