தலிபான்கள் மீதான தடைக்குறித்து விளக்கமளித்த முக நூல் நிறுவனம்
தலிபான்கள் மீது தடை விதைத்து குறித்து விரிவான விளக்கத்தை முக நூல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தலிபான்கள் மீதான தடைகளை அமெரிக்க விலக்கினாலும், தாங்கள் விலக்கப் போவதில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆப்கன் தலிபானை, பாகிஸ்தான் தாலிபனை போன்று வெளிநாட்டு தீவிரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிக்கவில்லை.
ஆனால் அவர்களை தனியான சர்வதேச தீவிரவாதிகளாக அறிவித்து தடைகளை ஏற்படுத்தியதுடன், அவர்களுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
ஆனால் தாங்கள் தலிபான்களை தீவிரவாத குழு என்றே கருதுவதாகவும் அவர்கள் தொடர்பான எந்த உள்ளடக்கங்களையும் முகநூலின் அனைத்து தளங்களிலும் வெளியிடுவதை தடை செய்வதாக வும் ஃபேஸ்புக் உள்ளடக்கப் பிரிவு துணைத் தலைவர் மோனிகா பிக்கர்ட் ) தெரிவித்தார்.