உலகை உலுக்கிய அவுஸ்திரேலிய தாக்குதல்; உயிரிழந்த தாக்குதல்தாரி இந்தியராம்!
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தாக்குதல்தாரிகளில் ஒருவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சாஜித் அஹ்ரம் (50) என்ற நபர் ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது தெரியவந்துள்ளது. சந்தேக நபர் இந்தியர் என இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

1998-ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்
அவுஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் தாக்குதல் நடத்தியதில் சாஜித் அஹ்ரம் என்பவர் ஹைதராபாத்தின் டோலிசௌகி நகரத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 1998-ம் ஆண்டு மாணவர் விசாவில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துவிட்டார்.
இதையடுத்து அவருடைய குடும்பத்தினருடனான தொடர்பு குறைவாகவே இருந்துள்ளது. இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே இந்தியா வந்துள்ளார். இவர், இறுதியாக கடந்த 2022ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
சாஜித் அஹ்ரமின் மகன் நவீது கடந்த 2001இல் அவுஸ்திரேலியாவில் பிறந்தவர். எனவே அவருக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. சாஜித் அஹ்ரம் ஹைதராபாத்தில் வணிகவியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்.
அவுஸ்திரேலியாவுக்கு இடம்பெயர்ந்த பின்னர் அவர் ஐரோப்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரிடம் இன்னும் இந்திய கடவுச்சீட்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை தாக்குதல் தாரிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என முன்னர் தகவ்ல்கள் வெளியாகிய நிலையில், தற்போது இந்தியர்கள் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.