ரஷ்ய பெண்களுக்கு ஏற்பட்டுள்ள தடை!
ரஷ்யாவில் உள்ள பெண்களை வெளிநாட்டவர்கள் வாடகைத் தாயாகப் பயன்படுத்துவதைத் தடை செய்யப்படவுள்ளது.
ரஷ்யப் பெண்களிடமிருந்து வாடகைத் தாயாக வெளிநாட்டவர்கள் சேவை பெறுவதைத் தடுக்கும் சட்டத்தை நாடு விரைவில் நிறைவேற்றும் என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையின் செய்தித் தொடர்பாளர் இன்று தெரிவித்தார்.
ரஷ்யாவின் அன்னையர் தினமான இன்று செய்தித் தொடர்பாளர் வியாசெஸ்லாவ் வோலோடின் (Vyacheslav Volodin)இதனைத் தெரிவித்தார்.
ரஷ்யாவில் கட்டண வாடகைத் தாய் முறை சட்டப்பூர்வமாக உள்ளது, ஆனால் இந்த நடைமுறையானது குழந்தைகளின் பிறப்பை வணிகமயமாக்குவதாக மதக் குழுக்களால் விமர்சிக்கப்பட்டது.
வெளிநாட்டவர்கள் வாடகைத் தாய் சேவையைப் பயன்படுத்துவதைத் தடுக்க தேவையான எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்று வோலோடின் கூறியுள்ளார்.
மேலும், இதற்கான முடிவை டிசம்பர் தொடக்கத்தில் எடுப்போம் என தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் வாடகைத் தாய் மூலம் பிறந்த சுமார் 45,000 பேர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக வோலோடின்(Vyacheslav Volodin) கூறினார்.
ரஷ்ய தாய்மார்களை பயன்படுத்தும் வெளிநாட்டினரைத் தடுக்கும் மசோதா ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்களால் மே மாதம் அதன் முதல் வாசிப்பில் ஏறக்குறைய ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இது இறுதி மூன்றாம் வாசிப்பில் கீழ்சபையால் நிறைவேற்றப்பட்டால், அது நாடாளுமன்றத்தின் மேல்சபையால் மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.