தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்!
லண்டன் தேம்ஸ் நதியில், இருந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இந் நிலையில், அவரின் புகைப்படத்தை குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 28-ஆம் திகதி பிரித்தானியாவின் தலைநகரான் லண்டனில் இருக்கும் தேம்ஸ் நதியில் சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டான்.
ஆரம்பத்தில் சிறுவன் யார் என்பது குறித்து தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அந்த சிறுவனின் பெயர் Zaheid Ali என்பதும், 13 வயது மதிக்கத்தக்க அவர் தென் லண்டனில் இருக்கும் Ark Globe Academy in Elephant and Castle பள்ளியில் படித்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் 20-ஆம் திகதி தன்னுடைய நண்பர்களுடன் பேருந்தில் பள்ளிக்கு சென்ற சிறுவன் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.
இது குறித்து லண்டன் நகர காவல்துறையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்,
ஏப்ரல் 28-ஆம் திகதி தேம்ஸிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தை Zaheid Ali-யின் குடும்பத்தினர் முறையாக அடையாளம் கண்டுள்ளனர். ஏப்ரல் 20-ஆம் திகதி Zaheid Ali தேம்ஸ் நதியில் விழுந்திருக்கலாம் என்றும், இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.