கொரோனா பாதித்த மணமகனை கரம் பிடித்த மணமகள்; ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!
இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா அலையின் தாக்கத்தால் பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்த வண்ணம் உள்ளதுடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகின்றது. இந்த கொரோனா நெருக்கடிக்கிடையிலும் பொதுமக்கள் பாதுகாப்பாக சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர்.
கொரோனாவை தடுக்க அங்கு ஊரடங்கு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. அதன்படி கேரளாவில் கடும் கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு தம்பதிக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்திற்கு இருவீட்டாரும் ஏற்பாடு செய்து வந்த நிலையில், மணமகனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ஆலப்புழா மெடிக்கல் காலேஜ்- மருத்துவமனையில் சிகிச்சைக்கு அவர் அனுமதிக்கப்பட்டார்.
திடீரென மணமகனுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுவிட்டதே, என இருவீட்டாரும் கவலையடைந்தபோதும் , மணமகள் குறிப்பிட்ட நாளில் நாளில் திருமணம் நடைபெற்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனையடுத்து அவர் மாவட்ட கலெக்டரிடம் சிகிச்சை பெற்று வரும் மணமகனை திருமணம் முடிக்க அனுமதி கேட்டபோது திருமணத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் , மணமகள் பிபிஈ கிட் அணிந்து மருத்துவமனைக்கு வந்து மணமகனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.