பரபரப்பாகும் பிரித்தானிய பிரதமர் தேர்தல் ; ஏற்பட்ட திடீர் திருப்பம்!
பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் போரிஸ் ஜான்சனையும் (Boris Johnson) இணைத்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சுமார் 10,000 கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதைத் தொடர்ந்து பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் திடீர் திருப்பம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போரிஸ் ஜான்சன் (Boris Johnson) அப்பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களால் அகற்றப்பட்டுள்ள விடயம் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களையும், பொதுமக்களையும் கோபமடையச் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்ந்லையில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (Boris Johnson) ஆதரவாக, அதாவது அவரையும் பிரதமர் வேட்பாளராக சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று கோரி Lord Cruddas, David Campbell-Bannerman என்னும், இந்நாள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் உருவாக்கியுள்ள மனு ஒன்றில், இதுவரை 9.150 கன்சர்வேட்டிவ் கட்சியினர் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து போரிஸ் ஜான்சனை (Boris Johnson) பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ள Lord Cruddas, அது போரிஸ் ஜான்சனை (Boris Johnson) பிரதமராக தேர்ந்தெடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பங்களுக்கு எதிரானதாகும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் ஒரு ஆட்சிக்கவிழ்ப்புக்கு சமம் என்று கூறும் Lord Cruddas, நவயுக ஜனநாயகம் பிறந்த இடமான பிரித்தானியாவிலேயே இப்படி ஒரு விடயம் நடப்பதைக் குறித்து தான் வெட்கமடைவதாவும் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் , பிரதமருக்கான போட்டியில் தற்போது நிற்கும் ரிஷி சுனக் (Rishi Sunak ) மற்றும் லிஸ் ட்ரஸ்ஸுடன் ( Liz Truss0 போரிஸ் ஜான்சனையும் (Boris Johnson) இணைத்துக்கொள்ளவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளதால், பிரதமர் தேர்தலில் எதிர்பாராத திடீர் திருப்பங்களை எதிர்பார்க்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.