இனி யாரும் கேட்கக்கூடாது; யாசகத்திற்கு தடை போட்ட நாடு!
நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் யாசகம் கேட்பவர்களுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில், தர்மம் கேட்பவர்களுக்கும், தெரு வியாபாரிகளுக்கும், அதிரடியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
லாகோஸ் மாகாண அரசு, அவர்களை தொந்தரவாக கருதுவதாகவும், எனவே மாகாணத்தில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு யாசகம் கேட்பவர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் , இன்னும் சில தினங்களில் அக் குழு இயங்கத்தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பில், இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயரதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சட்டத்திற்கு இணங்கி வாழும் மக்களுக்கு தெருவில் தர்மம் கேட்பவர்கள் தொந்தரவாக இருக்கிறார்கள்.
மேலும் குழந்தைகளை வைத்துக்கொண்டு யாசகம் கேட்பவர்களும், வியாபாரிகளும் வேறு பகுதியில் இருந்து இந்த மாகாணத்திற்கு வரவரவழைக்கப்படுகிறார்கள்.
இது ஒரு வியாபாரமாக நடைபெற்று வரும் நிலையில் மனித குலத்தையே இழிவுபடுத்தும் செயலாக உள்ளது. அத்துடன் குழந்தைகளை கட்டாயப்படுத்தி இதில் ஈடுபடுத்துகிறார்கள் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
மேலும் எங்களின் தெருக்களில் இது போன்ற நபர்களின் செயல்பாடுகள் மக்களின் நடமாட்டத்திற்கும், வாகன போக்குவரத்திற்கும் தொந்தரவாக இருப்பதுடன் சுற்றுச்சூழல் தொல்லைகளையும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் உண்டாக்குகிறதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.