மாறி மாறி தாலியை கட்டிக் கொண்ட தம்பதிகள்! அதிர்ச்சியடைந்த உறவினர்கள்
மும்பையில் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவர் மாறி மாறி தாலிக் கட்டிக் கொண்டனர்.
தனுஜா பாட்டீல், ஷார்துல் கதம் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவருக்கும் கடந்த ஆண்டே திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளிப்போனது.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். அப்போது ஷார்துல் கதமுக்கு ஒரு யோசனை தோன்றியது. காலங்காலமாக திருமண சடங்குகள் அனைத்தும் பெண்களுக்கே நடைபெறுவதாகவும், ஆணாதிக்கத்தை குறிக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் கருதினார்.
அதனால் அதை உடைக்கும் விதமாக மணமக்கள் இருவரும் மாறி மாறி தாலி கட்டிக்கொள்ள முடிவு செய்தனர் . இதுகுறித்து பெற்றோர்கள் , உறவினர்களிடம் கூறினர். அவர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் கூட இரண்டு பேரும் மாறி மாறி தாலி கட்டிக் கொண்டனர்.
புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து சடங்குகள் ஒருதலைப்பட்சமாக இருப்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை என்றும், வாழ்நாள் முழுவதும் தான் இந்த தாலியை அணிந்து கொள்ளப்போவதாக ஷார்துல் தெரிவித்துள்ளார்.