மகளின் திருமண செலவுக்காக சிறுக சிறுக சேமித்த பணம்; பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த விவசாயி
இந்தியாவில் மகளின் திருமண செலவுக்காக சேமித்த பணத்தை ஆக்சிஜன் வாங்க நன்கொடையாக விவசாயி ஒருவர் வழங்கிய நெகிழவைக்கும் சம்பவம் ஒன்ரு இடம்பெற்றுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், ஆக்சிஜன் போன்றவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக வடமாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர்களுடன் நோயாளிகளும், உறவினர்களும் பரிதவிக்கும் நிலையையையும் அவதானிக்க முடிகிறது.
இந்தநிலையில் மத்திய பிரதேச மாநில விவசாயி ஒருவர், தனது மகளின் திருமண செலவுக்காக சேமித்த ரூ.2 லட்சம் பணத்தை, கொரோனா நோயாளிகளின் உயிர்காக்கும் மருத்துவ ஆக்சிஜன் வாங்குவதற்காக நன்கொடையாக வழங்கி உள்ளார். நீமுச் மாவட்டம் குவால் தேவியன் கிராமத்தில் வசிக்கும் அவர், மாவட்ட கலெக்டர் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
அதில் தனது தாலுகா மருத்துவமனைக்கும் மற்றும் மாவட்ட மருத்துவமனைக்கும் தலா ஒரு மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார். தனது மகளின் திருமணத்த்திற்காக சிறுக சிறுக பணம் சேமித்து வந்த நிலையில் அவரது மகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. நாடு முழுவதும் கொரோனாவால் பலர் பாதிக்கப்பட்டு போராடி வருவது அவரின் சிந்தனையில் மாற்றத்தை வரவழைத்தது.
திருமண ஆடம்பர செலவை குறைத்து கொரோனா நோயாளிகளின் உயிர்காக்க உதவும் வகையில் பணத்தை செலவிட வேண்டும் என்று முடிவு செய்தாராம்.
அதன்படி மகளின் திருமண விழா நினைவாக, ஆக்சிஜன் சிலிண்டர் வாங்க நன்கொடை வழங்கியதாக அந்த விவசாயி கூறியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவருக்கு பலரும் பாராட்டுக்களை கூறிவருகின்றனர்.