அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்; இந்திய குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 8 மாத குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட சீக்கிய குடும்பம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடத்தப்பட்ட குழந்தை உட்பட 4 பேரும் அமெரிக்காவில் உள்ள ஹட்சின்சன் சாலைக்கு அருகிலுள்ள பழத்தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் , 48 வயதான சந்தேக நபர் தற்கொலை செய்து கொள்ள முயன்ற நிலையில் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகின்றது.
பஞ்சாபின் ஹோஷியார்பூரில் உள்ள ஹர்சி பின்ட் பகுதியைச் சேர்ந்த குடும்பம், கலிபோர்னியாவின் மெர்சிட் கவுண்டியில் உள்ள ஒரு வணிகத்தில் திங்கள்கிழமை கடத்தப்பட்டிருந்தனர்.
அந்த குடும்பத்தில் 8 மாத குழந்தை அரூஹி தேரி, அவரது 27 வயதான தாய் ஜஸ்லீன் கவுர், அவரது 36 வயதான தந்தை ஜஸ்தீப் சிங் மற்றும் அவரது 39 வயதான மாமா அமந்தீப் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டனர்.
குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் திங்கள்கிழமை பிற்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது,
அத்துடன் கடந்தப்பட்டவரின் வங்கி அட்டைகளில் ஒன்று மெர்சிட் கவுண்டியில் உள்ள அட்வாட்டரில் உள்ள ஏடிஎம்மில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து "வங்கி பரிவர்த்தனை செய்யும் நபரின் கண்காணிப்பு புகைப்படத்தை புலனாய்வாளர்கள் பெற்றுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.