15 வயது சிறுவனை கருணை கொலை செய்த தந்தை! வெளியான திடுக்கிடும் தகவல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை அவரது தந்தையே விஷ ஊசி போட்டு கருணை கொலை செய்த சம்பவம் ஒன்று பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இச்சம்பவம் சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கொடைக்காரன் வளவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் பெரியசாமியின் மகன் தான் வண்ணத்தமிழ் இவருக்கு வயது (15). ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் காலில் காயம் ஏற்பட்டு சேலம் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து சிகிச்சை வந்த சிறுவனை பரிசோதித்து பார்த்த மருத்துவர் அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்ட டிரைவர் பெரியசாமி அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஒன்றை வருடமாக சிகிச்சை அளித்து வந்தனர். பின்னர் சிறுவனின் உடல்நிலையில் மோசமானதால் குறித்த சிறுவனை அவரது வீட்டிற்கே பெரியசாமி கொண்டுவந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
வீட்டுக்கு வந்த பிறகு சிறுவனின் உடல் நிலையில் இன்னும் மோசமாக தொடங்கியுள்ளது. நடக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டதாக கூறப்படுகிறது, இதேவேளை தனது கண்முன்னே மகன் படும் நரக வேதனையை கண்டு தாங்கமுடியாமல் துடித்துள்ளார்.
பின்னர் மகன் இப்படி வலியால் துடிப்பதை விட மரணமடைவது மேல் என்று பெரியசாமி முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் மகன் வண்ணத்தமிழனை கருணை கொலை செய்த தந்தை பெரியசாமி முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவரது உறவினரும், தனியார் ஆய்வகத்தில் வேலைசெய்பவரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அந்த உறவினரை வீட்டுக்கு அழைத்து வந்த பெரியசாமி. குறித்த நபர் மூலம் ஊசியை மகன் வண்ணத்தமிழனுக்கு செலுத்தி கொன்றதாக அப்பகுதி ழுழுவதும் தகவல் பரவியது.
இது குறித்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் சந்தேகநபரான தந்தையும், விஷ ஊசி போட்ட நபரை பொலிஸார் கைது செய்து விசாரணையை நடத்தி வருவதாக கூறப்படுகின்றது.