உலக அளவில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளி! இந்த நாட்டை சேர்ந்தவர் தான்
உலகின் முதல் முறையாக கனடாவைச் சேர்ந்த ஒரு பெண் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிட்டிஷ் - கொலம்பியா பகுதியைச் சேர்ந்த குறிந்த பெண்ணுக்கு ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதீத வெப்பம் மற்றும் மோசமான காற்று காரணமாக அவருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் கைல் மெரிட் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளில் நான் சந்தித்துள்ள முதல் காலநிலை மாற்ற நோயாளி இவர்தான். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளது.
அவருக்கு இதய நோய் பாதிப்பும் உள்ளது. அவர் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதில்லை. திடீரென அவரது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு அனைத்து உறுப்புகளும் இயல்பாக இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும் உலக அளவில் கால நிலை மாற்றத்தால் ஒருவருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.