சீனாவை புரட்டி எடுக்கும் வெள்ளம்; பலி எண்ணிகை உயர்வு
சீனாவின் கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. இதன் காரணமாக சீனாவில் ஹெனான் மாகாணத்தில் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மேலும் 18 உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், இந்த பேரிடரில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 33 ஆக உயா்ந்துள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவித்தது. சீனாவில் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக ரூ.75,000 கோடி அளவுக்கு பொருள் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
அத்துடன் மழையை முன்னிட்டு ஹெனான் பகுதியில் வசிக்கும் 3.76 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா். வெள்ளத்தினால் மொத்தம் 12.4 லட்சம் பேர் மழை, வெள்ளத்திற்கு பாதிப்படைந்து உள்ளனர். சுரங்க பாதைகள், தெருக்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளதனால் பொது போக்குவரத்து பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.
இதேபோன்று, புத்த துறவிகள் சரணாலயங்களில் ஒன்றான சாவோலின் கோவிலும் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து கனமழை இருக்க கூடும் என வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தொடர்ந்தும் அங்கு தேடுதல் மற்றும் மீட்பு பணி நடந்து வருகிறது. இதில், நேற்று வரையில் 63 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை இன்னும் காணவில்லை.
8.52 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். 876.6 ஆயிரம் ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. 24,474 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அனர்த்தம் தொடர்பில் சீனாவின் ஹெனான் மாகாண நீர்வள துறை அதிகாரிகள் கூறுகையில் , மாகாணத்தின் சில பகுதிகளில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை பெய்யும் மழை அளவானது பதிவாகி உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.