என்னை அடிப்பதை நிறுத்துங்கள் என கதறிய பெண்... உதவ சென்றவருக்கு நேர்ந்த கதி
கனடாவின் கால்கரியில் ஒருவர் நடந்துசென்றுகொண்டிருக்கும்போது, ஒரு பெண் ’என்னை அடிப்பதை நிறுத்துங்கள்’ என கதறும் சத்தம் கேட்டு நின்றிருக்கிறார்.
ஆனால், மறுபக்கம் எமன் நிற்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை... James Short Park என்ற பூங்காவைக் கடந்து நடந்து சென்று கொண்டிருந்த ஒருவர், ஒரு ஆணும் பெண்ணும் சண்டையிடுவதைக் கேட்டு நின்றிருக்கிறார்.
என்னை அடிப்பதை நிறுத்துங்கள் என அந்த பெண் கதறுவதை கேட்டு இரக்கப்பட்ட அவர், அந்த பெண்ணை அடித்த அந்த ஆணை தடுத்திருக்கிறார். சட்டென அந்த நபர் கத்தி ஒன்றை உருவ, ஓட முயன்றிருக்கிறார் காப்பாற்ற வந்தவர்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் தடுக்கி விழ, அவரை கத்தியால் குத்தியிருக்கிறார் சண்டை போட்டுக்கொண்டிருந்த அந்த ஆண். கத்திக்குத்துபட்டவர் உயிரிழக்க, கத்தியால் குத்திய நபர் தப்பிவிட, இந்த சம்பவத்தைக் கண்ணால் கண்ட யாராவது இருந்தால் தங்களை தொடர்புகொள்ளுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உயிரிழந்தவருக்கு நாளை உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. அதுவரை அவரது முகத்தை வெளியிடமுடியாது என்று கூறியுள்ள பொலிசார், அவரது முகம் மறைக்கப்பட்ட புகைப்படத்தை மட்டும் வெளியிட்டுள்ளனர்.