அம்பாறையில் பாடசாலை சென்ற சிறுமி மாயம்! பொலிஸில் முறைப்பாடு
நேற்று 20 திகதி பாடசாலைக்கு சென்று நேற்று இரவு வரை வீடு திரும்பாத நிலையில் 15 வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள விநாயகபுரம் பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9 இல் கல்வி கற்றுவரும் 15 வயதுடைய சிறுமி சம்பவதினமான நேற்று வீட்டில் இருந்து பாடசாலைக்கு சென்று பின் பாடசாலை முடிவடைந்து மாலைவரை வீடு திரும்பவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி பாடசாலைய முடிவடையும் நேரம் வரை பாடசாலையில் இருந்துள்ளதாகவும் பின்னர் பாடசாலை முடிவடைந்த பின்னர் பாடசாலையைவிட்டு வெளியேறியுள்ளதாகவும் பாடசாலைக்கு செல்லும்போது பாடசாலை பையில் உடைகள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் 50 ரூபா பணம் தாயிடம்வாங்கிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.