வானில் தோன்றிய அதிசயம்; ஆச்சரியத்தில் அமெரிக்கர்கள்!
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் இரவில் வான்பகுதியில் திடீரென பிரம்மாண்டமாக ஜெல்லி மீன் போன்ற ஒரு உருவம் தோன்றிய நிலையில், அதன் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கடந்த 6ஆம் திகதி 53 செயற்கை கோள்களை விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ். புளோரிடா மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட பால்கன் ராக்கெட்டில் இந்த 53 செயற்கை கோள்களும் பூமியின் வெளிப்பகுதில் உள்ள சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் கூறியுள்ளது.
அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்தபடி பால்கன் 9 ராக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்த போது திடீரென வானில் வர்ணிக்க முடியாத வார்த்தைகளால் ஒரு அற்புத நிகழ்வு தோன்றியது.
விண்ணில் பறந்த ராக்கெட்டின் எக்சாஸ்ட்டரில் இருந்து அதிக அழுத்தத்துடன் வெளியேறிய புகை வளிமண்டலத்தில் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக பிரம்மாண்டமான ஜெல்லி மீன் போன்ற ஒரு உருவம் வானில் தோன்றியது.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் இந்த அற்புதமான காட்சியை கண்டு களிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பலர் இந்த காட்சிகளை புகைப்படங்களும் வீடியோக்களும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள நிலையில் அப்போது தற்போது அவை மிக வேகமாக பரவி வருகின்றன.
பால்கன் ராக்கெட் செலுத்தப்படும் சில மணிநேரங்களுக்கு முன்பு தான் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நிறுவன ஆராய்ச்சியாளர்கள் பூமிக்குத் திரும்பியது குறிப்பிடத்தக்கது.