புகைப்படங்களை வெளியிட்ட மாடல் அழகிக்கு ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை!
மியான்மர் மாடல் அழகி ஒருவருக்கு இராணுவ நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குறித்த பெண் வயது வந்தோர் இணையதளமான ஒன்லி ஃபேன்ஸில் தனது புகைப்படங்களை வெளியிட்டதற்காக ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.
மாடலும் முன்னாள் மருத்துவருமான நாங் ம்வே சானுக்கு(Nang Mwe San) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நாட்டில் இதுபோன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்ட முதல் நபர் இவர் என தெரியவந்துள்ளது. அவர் கலாச்சாரத்தையும் கண்ணியத்தையும் சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2021ல் ஆட்சியை கைப்பற்றிய இராணுவத்துக்கு எதிரான போராட்டங்களில் அவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
இதேவேளை், போராட்டங்களில் பங்கேற்ற புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்ட மற்றொரு மாடல் அழகியும் இதே சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.