நாடொன்றில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொலை; வெளியான பகீர் தகவல்!
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 15 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே சூனியக்காரர்கள் என குற்றம் சாட்டப்பட்ட நூற்றுக்கணக்கான பெண்கள் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஸ்பெயினின் கடலான் பிராந்திய நாடாளுமன்றம் மன்னிப்புக் கோரியுள்ளது.
இந்நிலையில் 700க்கும் அதிகமான பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதன் நினைவகத்தை மறுசீரமைப்பது தொடர்பான தீர்மானத்திற்கு பெரும்பான்மை எம்.பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
ஐரோப்பாவின் முதலாவது பிராந்தியமாக கட்டலோனியாவிலேயே சூனியக்காரர்கள் வேட்டையாடப்பட்டிருப்பதாக ஸ்பெயின் வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டதில் மிக மோசமான பகுதியாகவும் இது இருந்தது.
குழந்தைகளின் திடீர் மரணம் அல்லது மோசமான விளைச்சலுக்கு சூனியக்காரர்களே காரணம் என்று நம்பப்பட்ட நிலையில், சூனியக்காரர்கள் என்ற குற்றச்சாட்டில் பெரும்பாலும் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் ஐரோப்பாவில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த செயலுக்காக இதற்கு முன்னர் ஸ்கொட்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் நோர்வே நாடுகளும் மன்னிப்புக் கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021