கொலை செய்யப்பட்ட வங்கியின் முகாமையாலர்
வங்கியின் முகாமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இவர் ஹக்மன கெபலியபொல தெற்கு சனச வங்கியின் முகாமையாளர் என தெரிய வந்துள்ளது.
இவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
தாக்குதல்
வங்கி முகாமையாளரின் கணவரே இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலினால் தலையிலும் கழுத்திலும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு அவர் பிரதேசவாசிகளால் ஹக்மன கங்கோடாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார் என் தெரிய வந்துள்ளது.
சந்தேக நபரான கணவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஹக்மன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.