மின்சார துண்டிப்பின் பின்னணியிலுள்ள மர்மம் - மைத்திரி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
மின்சாரத்துறையில் எழுந்துள்ள பிரச்சினை தற்போது ஏற்பட்டதல்ல என்பதுடன் அது பலவருடங்களாக நிலவும் மாஃபியா என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் தொழிநுட்ப பிரிவுகளில் நீண்ட காலமாக பிரச்சினைகள் நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பிரிவுகள் தனியாக அதிகளவான மின்சாரத்தை பெறுகின்றனர். இதற்காக பில்லியன் கணக்கான பணம் செலவிடப்படுகிறது.
நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் இன்று பாரியளவான முரண்பாடுகளுக்கு வித்திட்டுள்ளன.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் உரிய பிரிவுகளுடன் இணைந்து கலந்துரையாடி தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.