53000 க்கு ஆர்டர் செய்தவற்கு காத்திருந்த அதிர்ச்சி
பிளிப்கார்ட்டில் 53000 ரூபா மதிப்புள்ள ஐபோன் ஒன்றினை ஆர்டர் செய்தவற்கு சோப்பு கட்டி அனுப்பிவைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் சமீபகாலமாக வீதிகளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதை காட்டிலும் வீட்டிற்கே வந்து பொருட்களை தரும் ஆன்லைன் வர்த்தகத்தையே தற்போது அதிகம் பயன்படுத்துகின்றன. அதில் பல பொருட்கள் மாறியும் சில பொருட்கள் தரமின்றியும் அனுப்பிவைக்கப்படும். அந்த வகையில் சிம்ரன்பால் சிங் என்பவர் பிளிப்கார்ட்டில் 53000 மதிப்புள்ள ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.
அதன் பின்பு ஐபோன் டெலிவரி ஆனதும் மகிச்சியில் அதனை பிரிக்கும்போது வீடியோ எடுத்தார். அந்த பார்சலை பிரித்த சிம்ரன் பாலுக்கு பாரிய அதிரிச்சியாக இருந்ததது காரணம் அதனுள் இருந்தது ஐபோன் அல்ல நிர்மலா சோப்புக்கட்டிகள் தான் இருந்துள்ளது.
இதனையடுத்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் இவர் புகார் அளித்துள்ளார்.
அந்த நபருக்கு ஆப்பிள் போனுக்கு பதிலாக சோப்புக் கட்டியை விநியோகம் செய்த நிறுவனத்துடன் பிளிப்கார்ட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், நீண்ட முயற்சிக்குப் பின்பதாக தங்கள் தவறை ஒப்புக் கொண்டு அவருடைய ஆர்டரை கேன்சல் செய்து பிளிப்கார்ட் முழு பணத்தையும் திரும்ப அளித்துள்ளது எனவும் கூறப்படுகிறது.