பிரித்தானியா விடுதியில் மகாராணி ஆவி... உலா வரும் சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய விடுதி ஒன்றில் மகாராணியின் ஆவி சுற்றி திரிவதாக அங்கு பரவலாக பேசப்பட்டு வருகிறது. மகாராணி மேரியின் வீடானது 1590 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அவர் பிரித்தானியா 1553 முதல் 1558 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்துள்ளார். அதிலும் இவர் கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்தவர். ஆகவே தனது பிரிவில் சேர மறுத்த புரொட்டஸ்டன்ட் சபை குழுவைச் சேர்ந்த 280 பேரை தீயிட்டு கொளுத்த ஆணையிட்டுள்ளார். அதனால் இவர் 'Bloody Mary' என்று அழைக்கப்படுகிறார்.
இந்த நிலையில் தற்போது அந்த வீட்டை lesley reynolds என்பவர் வாங்கியுள்ளார். அதனை அவர் தற்போது தாங்கும் விடுதியாக மாற்றியமைதுள்ளார். இந்த விடுதியில் தங்குவதற்கு 600 பவுண்ட் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விடுதியில் தங்க வருபவர்கள் வினோதமாக எதனையோ உணர்வதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் Lesleyயின் பேத்தியான ஒரு சிறுமி கூறியதில் " நான் இந்த விடுதியின் 16ஆவது அறையில் உறங்கினேன். அந்த சமயம் எனது காலில் எவரோ கிச்சுகிச்சு காட்டுவது போன்று தெரிந்தது. மேலும் மகாராணி மேரி பரிவாகத்தான் நடந்து கொண்டார்" என்றும் அந்த சிறுமி கூறியுள்ளாள்.
இதன் உண்மை நிலையைக் கண்டறிய ஆவிகளுடன் பேசுபவரான lee whyberd என்பவர் அந்த விடுதிக்கு சென்றுள்ளார். அவரோ அங்கு புதிய அனுபவத்தை பெற்றார். அதுகுறித்து கூறிய அவர் தன்னை யாரோ தலையணை வைத்து கழுத்தை நெறிப்பது போல இருந்ததாக தெரிவித்தார்.
இதற்கிடையில் விடுதியி உரிமையாளர் lesley கூறியதாவது,
"ராணியால் விடுதிக்கு வசிப்பவர்களுக்கு எந்த இன்னல்களும் இல்லையென்றால் ஒரு பிரச்சனையும் இல்லை.
ஆனால் எவரேனும் பாதிக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்தார்.