யுவதியை வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரிற்கு நேர்ந்த கதி
பிரேஸிலில் சம்பவம் யுவதி ஒருவரை வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரின் அந்தரங்க உறுப்பை அந்த யுவதியும் அவரின் காதலனும் வெட்டித் துண்டாக்கி, பன்றிக்கு உணவாக்கிய சம்பவம் பிரேஸிலில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
ஒல்ஹோஸ் டி அகுவா நகரைச் சேர்ந்த 36 வயதான மேற்படி நபர், மதுபோதையுடன் வந்து தனது மருமகளை வல்லுறவுக்குட்படுத்த முயன்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அந்நபரிடமிருந்து தப்பித்த மேற்படி யுவதி இது குறித்து தனது காதலனிடம் கூறினார். அதையடுத்து, யுவதியும் அவரின் 20 வயதான காதலனும் அந்நபரை பழிவாங்கத் தீர்மானித்தனர்.
இவ்விருவரும் மேற்படி நபரை அருகிலுள்ள கரும்புத் தோட்டமொன்றுக்கு வரச் செய்து, அந்நபரை தாக்கியுள்ளனர். பின்னர் மேற்படி நபரின் ஆணுறுப்பையும் விதைகளையும் இளைஞனும் காதலியும் துண்டித்து, பன்றிகளுக்கு உணவாகக் கொடுத்தனர் என செய்தி வெளியாகியுள்ளது. அந்நபர், போகெய்யுவ்வா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அந்நபரின் குருதிப்பெருக்கை மருத்துவர்கள் கட்டுப்படுத்தினர். ஆனால், அவரின் ஆணுப்பை மீளப் பொருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை என மருத்துவர் பிலிப் லோபோ கூறியுள்ளார்.
அந்நபரின் அந்தரங்க உறுப்பை தேடும் நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டனர், ஆனால் அது கண்டுபிடிக்கப்படவில்லை. அது மிருகங்களால் உண்ணப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது என பொலிஸ் அதிகாரி மைக்கல் ஸ்டீபன் சில்வா தெரிவித்துள்ளார்.
அதேவேளை, மேற்படி நபரின் அந்தரங்க உறுப்பை துண்டித்த இளைஞனும் காதலியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.