காதலியை கொலை செய்து புதைத்த முதியவருக்கு நேர்ந்த கதி!
தனது காதலியை கொலை செய்து புதைத்த நபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியில் இடம்பெற்றுள்ளது. தனது காதலியை கழுத்தை நெரித்து கொன்ற 60 வயது முதியவர், அவரது உடலை கொல்லைப்புறத்தில் புதைத்தபோது மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ட்ரெண்டனில் உள்ள ஒரு முற்றத்தில் சுயநினைவற்ற நிலையில் கிடந்த நபர் ஒருவரை பார்த்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து 60 வயதான ஜோசப் அந்தோணி மெக்கின்னனின் உடலை விசாரணை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மெக்கின்னனின் மரணம் தொடர்பில் விசாரணை செய்த போது புதிதாக தோண்டப்பட்ட குழியில் குப்பைப் பைகளில் சுற்றப்பட்ட ஒரு உடலை விசாரணையாளர்கள் கண்டுபிடித்தனர்.
அது மெக்கின்னனின் காதலி 65 வயதான பாட்ரிசியா ரூத் டென்ட் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர். டென்ட் மீதான பிரேதப் பரிசோதனையில் அவள் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
அத்தடன், அண்டை வீட்டுக்காரர்கள் அதிகாரிகளிடம் மெக்கின்னன் தனது முற்றத்தில் ஒரு குழி தோண்டிக் கொண்டிருந்ததை முந்தைய நாள் பார்த்ததாகக் கூறியதாக விசாரணையாளர்கள் கூறியுள்ளனர்.
மெக்கின்னனின் பிரேதப் பரிசோதனையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்தமை உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.